வவுனியாவில் பொலிஸார் முன்னிலையில் மோதிக்கொண்ட இளைஞர்கள்!!(காணொளி)

343


 
வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் நேற்று(20.05.2017) இரவு போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இரு குழுக்கள் மோதியுள்ளது. இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் இளைஞர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் இளைஞர்கள் பொலிஸாரையும் எச்சரித்ததுடன் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.



இதன் காரணமாக பொலிஸார் எடுத்த நடவடிக்கை கைகூடாத நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸார் ஐவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.