பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி!!(வீடியோ)

512


அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது தனது வீட்டின் சமையலறை குப்பையாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.



திருடர்கள் வீட்டினுள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

வீட்டிற்கு வந்து சோதனையிட்ட பொலிஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவை சோதனை செய்ததில், அந்த திருடன் கரடி என தெரியவந்துள்ளது.



வீட்டின் வெளி அறையில் ஜாலியாக உலாவிய கரடி, அங்கிருந்த பியானோவில் கையை வைத்து வாசித்துள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த சமையலறைக்கு சென்று, அவற்றையெல்லாம் சூறையாடியுள்ளது.



இவை அனைத்தும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்துள்ளது.


சமையலறையில் உள்ள ஜன்னல் பெரியதாக இருந்ததால், அதன் வழியாக கரடி நுழைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.