30 நிமிட நடைப்பயிற்சியால் உடலில் ஏற்படும் அதிசயங்கள்!!

429

தினமும் காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சியை சரியாக பின்பற்றி வந்தால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம்.

நடைப்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வருவதன் மூலம், ஒரு வருடத்தில் நம் உடலில் உள்ள மூன்றரை கிலோ கொழுப்பைக் கரைக்க முடியும்.

காலையில் தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை பின்பற்றி வந்தால், இதயநோய்கள் ஏற்படுவதற்கான 50 சதவிகிதம் வாய்ப்புகளை குறைக்கலாம்.

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் ஏற்படும் ரத்த அழுத்தப் பிரச்சனையை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, கெட்ட கொழுப்பை எளிதில் கரைக்கிறது.

மார்பக மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு 3-5 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் வரை தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால், உயிர்வாழும் நாட்களை 50 சதவிகிதம் அதிகரிக்கலாம்.

மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து காலையில் நடைப்பயிற்சி செய்து வந்தால், அது உடம்பில் உள்ள என்டோஃபின் சுரப்பைத் தூண்டி, மனதை அமைதிப்படுத்தி, மனப் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.