இலங்கையில் கணவனுக்காக மோதிக் கொண்ட இரு பெண்கள்!!

601

நீதிமன்ற வளாகத்தில் மோதிக்கொண்ட இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனைக் கைதியான வெலே சுதாவின் சகோதரருக்கு உரிமை கோரி இரு பெண்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

சட்டபூர்வ மனைவி தான் என தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், தானே மனைவி என பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து தலையிட்ட பொலிஸார் குறித்த இரு பெண்களையும் கைது செய்யுள்ளனர்.