தேசிய ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் முதலிடம் பெற்ற வவுனியாவை சேர்ந்த அபிசிகன் யப்பானுக்கு விஜயம்!(படங்கள்)

1885


கடந்த வருடம்இடம்பெற்ற  (2016) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடக்கிற்கு பெருமை சேர்த்திருந்தார்.



மேற்படி மாணவன் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையை தொடர்ந்து   யப்பானில் இடம்பெறும் The Asian-Pacific Children’s Convention (APCC) in FUKUOKA  என்னும் சர்வதேச சிறுவர் மாநாட்டுக்காக கடந்த 13.07.2017 இல் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தும் வகையில்  கல்வியமைச்சின் ஏற்பாட்டில் புறப்பட்டு சென்றனர் .

மேற்படி சிறுவர் மாநாட்டுக்காக இலங்கையிலிருந்து 06 மாணவர்கள் தெரிவு செய்யபட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது .



இவர்களில்  அகில இலங்கை ரீதியில்  இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற  அபிசிகனும்  யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து 194  புள்ளிகள் பெற்ற உமாசங்கர் ஜெயனியும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது ..



ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப்  முதலிடம் பெற்ற சிங்கள் மாணவன் பெற்ற மாத்தறை மெதடிஸ்ட் வித்தியாலய மாணவன் சஜீத் நிரான் சமரவிக்ரம ம கடைசி நேரத்தில் அம்மை  நோயினால் பாதிக்கபட்டமையால்  அவரால் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளமுடியவில்லை ..


மேற்படி சர்வதேச சிறுவர் மாநாடு இரண்டு  வாரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

மேலதிக விபரங்களுக்கு


http://www.apcc.gr.jp    

https://www.facebook.com/APCCFukuoka