நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு : யாழில் பதற்றம்!!

631


 
யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனம் தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சற்று முன் நல்லூர் – பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இதனால் பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.