இலங்கையுடன் இரண்டாவது டெஸ்ட்: குழப்பத்தில் கோஹ்லி!!

309


இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.



இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கிறது.
அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் இலங்கை அணி கவனமாக இருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.



ஏனெனில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில், தவான் 190 ஓட்டங்கள் எடுத்தார். அதேபோல இரண்டாவது இன்னிங்சில் அபினவ் முகுந்த அரைசதம் அடித்து கைகொடுத்தார். தற்போது காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ள ராகுல், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.



இதனால் இந்திய அணியில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் துவக்க வீரர்களாக யாரை தேர்வு செய்வது என பெரும் குழப்பத்தில் உள்ளார் கோஹ்லி.


ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.