குழந்தை பெற்ற சில நிமிடங்களில் துண்டுகளாகி பரிதாபமாக பலியான பெண்!!

283

தனியார் வைத்தியசாலையில் குழந்தை பெற்ற பெண் நோயாளர் விடுதிக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த ரோசியோ கார்டெஸ் நுனெஷ் என்ற 25 வயதுப் பெண்ணுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த ரோசியோவை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை  தள்ளுவண்டியில் நோயாளர் விடுதிக்கு லிப்ட் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயற்படத் தொடங்கியது. அந்த நேரம் நோயாளர் தள்ளு வண்டியில் படுத்திருந்த ரோசியோவின் தலையை லிப்ட் கதவு நசுக்கியுள்ளது. இதனால் அவர் தலை வேறு உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.