வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை..!

966


vavuniyaஇன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30மணி தொடக்கம் மாலை 5மணி வரை வவுனியாவில் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நெளுக்குளம், கூமாங்குளம், பண்டாரிகுளம், வேப்பங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



திருத்தவேலைகள் மற்றும் வீதீயோர மரங்களை வெட்டும் பணிகளுக்காகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை 5மணிக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



(பாஸ்கரன் கதீஸன்)