தென் கொரியாவில் மர்மமான முறையில் காணாமல் போன இலங்கை இளைஞன்!!

264


தென் கொரியாவின் – யேசூ பிரதேசத்தில் தொழில் புரிந்து வந்த மாத்தறை ஹந்துகல பெலியத்தகும்புர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

நுவன் சத்துரங்க என்ற இந்த இளைஞனின் தாயாரான எம்.குமுது ஜானகி புற்று நோயாள் பாதிக்கப்பட்டவர். இளைஞனின் தந்தையான கே.எல்.குணபூஜித சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இளைஞனின் ஒரே சகோதரரான சம்பத் சந்தருவான் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.



இதனால் வீட்டின் பொருளாதார பொறுப்பை சுமக்க வேண்டிய குடும்பத்தின் மூத்த பிள்ளையான நுவன் சத்துரங்க கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி தொழிலுக்காக தென் கொரியாவுக்கு சென்றுள்ளார்.



தென் கொரியாவின் – யேசூ பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் பெற்றோர் மற்றும் சகோதரருடன் தொலைபேசியில் உரையாடி அவர்களின் நலன் விசாரிப்பது நுவன் சத்துரங்கவின் வழக்கம் என பெற்றோர் கூறுகின்றனர்.


கடந்த 6ஆம் திகதி பெற்றோரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட நுவன் அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகத்திடம் விசாரித்த போது இன்னுமொருவருடன் படகில் சென்றுக்கொண்டிருந்த போது கடலில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் படகில் புறப்பட்டுச் செல்வது கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.


நுவன் சத்துரங்கவுடன் படகில் சென்ற நபர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பெற்றோர் அவரை தொடர்புக்கொண்டு விசாரித்த போது படகை ஓட்டிய நுவன் சத்துரங்க இரவு 10 மணியளவில் படகில் இருந்து தூக்கி எறியப்பட்ட கடலில் விழுந்ததாகவும், கயிற்றின் உதவியுடன் அவரை காப்பாற்ற முயற்சித்த போது அது தோல்வியடைந்தாகவும் நுவனின் பெற்றோரிடம் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த நபர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்து இரண்டு வாரத்தின் பின்னர், தமது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், மகனுக்கு ஏற்பட்ட நிலைமை சம்பந்தமாக நியாயத்தை நிறைவேற்றுமாறு பெற்றோர் உட்பட நெருக்கமானவார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்