ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்!!

810

 
மதுரையில் ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் குடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கேசம்பட்டி கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவர் தெய்வம். இவர் வளர்த்த ஆடு ஒன்று சில மாதங்களுக்கு முன்னர், குறைமாத கன்று ஒன்றினை ஈன்றுவிட்டு இறந்தது.

அதன் பின்னர், அந்த கன்றுக்கு தெய்வம் பசும்பாலை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று அதற்கு பால் குடுத்து வந்தது.

நாளடைவில், அந்த ஆட்டுக்குட்டிக்கும் நாய் பால் குடுக்க ஆரம்பித்தது, இதனைப் பார்த்த தெய்வம் கண்கலங்கி அழுதுள்ளார்.

அவர் கூறுகையில், மனிதர்கள் இடையே பல வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்த ஜீவன்களிடம் இப்படி ஒரு பரிமாற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ச்சியடைவதோடு புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.