மன்னார் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த 15 பேரின் சடலங்கள் தோண்டி எடுப்பு!!

333


மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.



மன்னார் கத்தோலிக்கச் சபை நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நேற்றையதினம் மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

10 வருடங்களுக்கு முன்னர் மன்னார் கத்தோலிக்க சபையில் கடமையாற்றிய கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 15 பேரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



இந்த மயானம் முன்னதாக கத்தோலிக்கச் சபைக்கு சொந்தமானதாக இருந்த போதும், பின்னர் அப் பகுதியில் மரணிப்பவர்கள் அனைவரது சடலமும் அங்கு புதைக்கப்பட்டது.



எனவே, குறித்த 15 பேரின் சடலங்களையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, கத்தோலிக்க மயானத்தில் புதைக்க வேண்டும் என்பதாலேயே இவை தோண்டி எடுக்கப்பட்டதாக, பொலிஸார் கூறியுள்ளனர்.


அத்துடன், மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் அவை புதிய மயானத்தில் புதைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.