இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!!

410

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன வெலிகபொல பிரதேச செயலக பிரிவிலும், அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ள நிலையில், மழை தொடருமாயின் மண்சரிவு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.