வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட சாந்தன், ஜூட் இருவரினதும் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

934


 
கடந்த 2001ம் ஆண்டு மார்கழி 07 ம் திகதி வவுனியா வைரவபுளியங்குளத்தில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான ஜூட் கஜன் மற்றும் சாந்தன் ஆகியோரின் 16வது வருட நினைவு தினமும் ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 23வது வருட பூர்த்தியையும் முன்னிட்டு உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபச்சுடரும் ஏற்றி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் பின்னர் உதைப்பந்தாட்ட போட்டியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந் நிகழ்வில் அமரர் சாந்தனின் சிறிய தந்தை விஜயகுமார் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் , வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, கண்ணகி தேவராஜா, சுந்தரலிங்கம் , எஸ்.எஸ்.வாசன், விவேகானந்தன், ஜங்ஸ்டார் கழக தலைவர் ஜீவன், செயலாளர் லெஸ்லி , பொருலாளர் ரதீபன், கழக உறுப்பினர்களான சந்திரகுமார் கண்ணன், பாபு, ஹரிகரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.