விடுதி மாடியிலிருந்து ஒன்றாக குதித்து தற்கொலை செய்த மாணவிகள்: காரணம் என்ன?

658


தமிழகத்தில் தனியார் பள்ளியிலிருந்து நேற்று காணாமல் போன மாணவிகள் இருவர் விடுதி மாடியிலிருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சேலத்தின் அரிசிப்பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி என இருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நெருங்கிய தோழிகளான இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இன்று காலை உணவு விடுதி ஒன்றின் மாடியிலிருந்து ஒன்றாக குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.



இதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தற்கொலைக்கு இருவரையும் ஆசிரியர் தனித்தனியாக பிரித்து வகுப்பறையில் அமர வைத்ததே காரணம் என கூறப்படுகிறது.