வவுனியாவில் சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் – 2017!!

898


 
சர்வதேச விசேட தேவைடையோர் தின நிகழ்வு வடக்கு சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (12.12.2017) காலை 9.45 மணிக்கு இடம்பெற்றது.



வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் நடனம் , மாவட்ட மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியேற்றியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வின் அதிதிகளாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ப.தனுஷா, கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ச.ரஜீபன், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாத்திமா ஹிக்மா, மன்னார் மாவட்ட சேர்ந்த த.அபிகாஜினி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.அபிவர்மன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன், கூட்டுறவு திணைக்கள பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் , சமூக சேவைகள் திணைக்கள தலமைப்பீட அதிகாரி இராஜமனோகரன், வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், விசேட தேவையுடையோர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.