வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலை விழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (11.12.2017) காலை 9.30 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை மீரா குணசீலன் தலைமையில் இடம்பெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜி .ரி.லிங்கநாதன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் , ராஜேஸ்வரன், அருள்வேல்நாயகி, பிரதி கல்விப் பணிப்பாளர் ரகுபதி, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
இதன் போது மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.