அண்ணனின் கையில் உயிரை விட்ட தம்பி!!

627

பிரித்தானியாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் வழக்கில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

பிரித்தானியாவின் Hertfordshire நகரில் கடந்த வாரம் 15 வயது மதிக்கத்தக்க ஜேக்கப் ஆபிரகாம் இறந்து கிடந்தார். சம்பவ தினத்தன்று உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய ஜேக்கப், ஒரு மணிநேரத்தில் கொல்லப்பட்டார். தன்னுடைய மூத்த சகோதரர் கையில் உயிரைவிட்ட ஜேக்கப், குத்தப்பட்ட நிலையில் வீட்டை நோக்கி ஓட முயன்றதாக தெரிகிறது.

இந்தகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், ஜேக்கப்பின் இந்த இறப்பு குறித்து எவருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவித்துள்ளனர்.

மேலும் நேரில் தகவல் அளிக்க பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், தங்களது இணையதள பக்கத்தில் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே விடுவிக்கப்பட்டுள்ளான்.

ஜேக்கப் ஆபிரகாம் பத்து நாட்களில் தனது 16வது பிறந்த நாளை கொண்டாடவிருந்தது குறிப்பிடத்தக்கது.