வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியின் ஒளிவிழா 2017!!

976


 
வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வானது பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் க.கணேசராசா தலைமையில் வெளிச்சம் அறக்கட்டளையின்அணுசரனையுடன் பாரதி முன்பள்ளி நிலையத்தில் இன்று (12.12.2017) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களினது வரவேற்பு நடனம், முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும், மற்றும் உள்ளூராட்சி மன்றத்தினால் வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.



இந் நிகழ்வின் அதிதிகளாக வேப்பங்குளம் தேவாலய பங்குத் தந்தை, வவுனியா நகரசபையின் செயலாளர் தயாபரன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான வத்சலா, யுனைற் வஜுபா, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், செயலாளர் தி.கார்த்திக், பா.சிந்துஜன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் வ.பிரதீபன், சனசமூக நிலையத்தின் செயலாளர் சிவராஜசேகரன், பாரதி முன்பள்ளி ஆசிரியர் மேரி மெற்றில்டார், முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.