வவுனியாவில் யுவதியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய திருடன்!!

792

வவுனியா கணேசபுரம் பகுதியில் நேற்று (13.12.2017) மாலை. 4.50 மணியளவில் வீதியில் தனிமையில் சென்று கொண்டிருந்த யுவதி ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு திருடன் தப்பி ஓடி விட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 4.50 மணியளவில் கணேசபுரம் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த இளம் யுவதியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞர் ஒருவர் வீதியில் சன நடமாட்டம் அற்ற பகுதியில் வைத்து இளம் யுவதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக்ககொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் குறித்த யுவதி மோட்டார் சைக்கிலின் இலக்கத்தை குறித்து வைத்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் உறவினருடன் சென்ற குறித்த யுவதி முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிலின் இலக்கத்தை வைத்து திருடனைக்கைது செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.