அக்கரப்பத்தனை – வுட்லேகர் தோட்டத்தில் ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 – 22 வயதிற்குட்பட்ட இருவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை – வுட்லேகர் தோட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதை சகித்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரும் குறித்த நபரை மண்வெட்டியினால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் இரு சகோதரர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் ருவன் இந்திக டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.