எமனாக மாறிய பூனை : யாழில் நடந்த சோகச் சம்பவம்!!

338

 

யாழ்ப்பாணத்தில் பூனை ஒன்று கடித்தமையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்மநாதன் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது பூனை ஒன்று கடித்துள்ளது. இதனையடித்து உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால், பிரேத பரிசோதனை முடியும் வரை மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

உடலில் விஷம் கலந்துள்ளமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை மேற்கொண்ட வைத்தியர் என்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

குறித்த பூனையின் உடலில் ஏதோ ஒரு நோய் தன்மை காணப்படுவதாகவும் பூனையை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு உறவினர்களுக்கு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.