வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

769

 
வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.12.2017) இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.ஆனந்தசங்கரி , பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் அதிதிகளாக சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் நா.சோனாதிராஜா, வவுனியா இந்து மாமன்ற தலைவர் வை.செ.தேவராசா, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவர் மு.குகதாசன், யாழ் பல்கலைக்கழக அரச அறிவியல் துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட – பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்கள், வவுனியா வர்த்தக சங்க தலைவர், உள்ளுர் விலைபொருள் உற்பத்தி சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.