வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.12.2017) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கல்வியற்கல்லூரிக்கு சொந்தமான வாகனம் இன்று அதிகாலை ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது
இவ் விபத்தில் வீதியில் நடந்து சென்ற 46 வயதுடைய நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் சமயத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.