வவுனியாவில் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வெளியீடு!!

1043

 
வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (31.12.2017) காலை 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது.


பிரதான நடிகர்களாக இளம் நடிகர் சி.ஜதுர்ஷன், ஜே.தர்ஷன்ஜெயகனேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மு.கதிர்காமத்தம்பி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக ICC நிறுவனத்தின் பணிப்பாளர் சந்ரு, வவுனியா இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஜனகன், உறுப்பினர் சதீஸன், வவுனியா திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ்கரன், செயலாளர் வினோத், வெளிச்சம் அறக்கட்டளையின் பணிப்பாளர் லம்போதரன், வவுனியா பசங்க அமைப்பின் உறுப்பினர் பிரதீபன், Sucide படத்தினுடைய இயக்குனர் கௌதமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருள் குறும்படத்தின் திரையிடலை தொடர்ந்து அதன்பின் கலந்து கொண்டவர்களின் ஆசியுரைகளுடன் இறுதியில் பூபாலசிங்கம் கேசவனின் ஏற்புரையுடன் வெளியீடு நிறைவு கண்டது.

இருளிட்கு எவ்வாறு இரண்டு வெளிப்பாடுகள் இருக்குமோ.. அதுபோல் இதன் மையக்கரு இதுதான்.. அதாவது இன்றும் எம்மில் பலருக்கு இருக்கும் விளங்க முடியாத விபரிக்க முடியாதா விடைகான முடியாத அமானுஷ்யம் மற்றும் ஆத்மா சார்பான பிரச்சனைகள் பேய் பற்றிய கருத்துக்களை மருத்துவ ரீதியில் சிறிய விளக்கமே இக் குறும்படம்.