வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில பொங்கல் விழா!!

778

 
வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று(15.01) இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுகானி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை கலாச்சார நடனங்கள் தைப் பொங்கல் விழாவை பற்றிய சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தழிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் சிறப்பு விருந்தினர்களாக சதாசிகர் குருக்கள், சிவகுகநாதக் குருக்கள், சண்முகநாதக் குருக்கள், மயூரக் குருக்கள், ராஜ்மோகசர்மா வாசுதேவசர்மா ஆகிய மதத்தலைவர்களும் வவுனியா மாவட்ட இளைஞர்சேவைகள் மன்ற உதவிப்பணிப் பணிப்பாளர் செனவிரத்ன, வவுனியாமாவட்ட செயலக இந்து கலாச்சார அபிவிருத்தி அதிகாரி கஜேந்திரன் தமிழ்விருட்சம் அமைப்பின் செயலாளர் ஜெகன், வவனியா மாவட்ட இளைஞர் கழக அங்கத்தவர்கள், நாடக இயக்குனர் சு.வரதகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இப் பொங்கல் விழாவிற்கான அனுசரனையை தமிழ்விருட்சம் அமைப்பினர் வழங்கினர்.