வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல்!!

1179

 
தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

உழவர்களின் நண்பர்களான மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக வணங்கப்படும். மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.