இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு மகோற்சவ பெருவிழா
நிகழும் ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 08ஆம்நாள் (20.02.2018) செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதியும் ரேவதி நட்சத்திரமும் சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .
மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
மேற்படி மகோற்சவத்தில்
23.02.2018 வெள்ளிகிழமையன்று கற்பூர சட்டி திருவிழா
27.02.2018 செவ்வாய்கிழமையன்று சப்பர திருவிழா
28.02.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழா
01.03.2018 வியாழக்கிழமையன்று தீர்த்த திருவிழா
02.03.2018 வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும் இடம்பெறுகின்றது .