தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!!

472

 
அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப், Chicken Soup, Happy for No Reason போன்ற பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். மர்சி இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், தற்போது ஆறாவது முறையாக தனது கணவர் செர்ஜியோவுடன் இந்தியா வந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது திருமணத்தை புதுப்பிக்கும் வகையில் மதுரை அருகிலுள்ள புறநகர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் தனது 60 பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாட மர்சி இந்தியா வந்துள்ளார். மர்சி கூறுகையில், நான் இந்தியாவுக்கு வருவதை நேசிக்கிறேன், இங்கு எனக்கு ஆழமான பரிச்சயம் இருக்கிறது. மகரிஷி யோகா ஆசிரமத்தில் நான் தியானம் செய்ய கற்றுள்ளேன், தியானமானது மன அழுத்தத்திலிருந்து விடுபட எனக்கு உதவுகிறது, எனக்கு மீனாட்சி என்றும், என் கணவருக்கு சிவா என்ற பெயரும் கூட உள்ளது.

நிறைய இந்தியர்கள் இந்த காலத்தில் மகிழ்ச்சியில்லாமல் உள்ளார்கள், பொருட்கள் மீது அதிக நாட்டம் செலுத்துவதால் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

அதே நேரத்தில் இந்திய பெண்கள் அதிக அதிகாரம் பெற்று வருவதையும் காணமுடிகிறது என கூறியுள்ளார். மர்சி Your Year of Miracles என்ற பெயரில் பெண்களுக்கான ஓன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

72 நாடுகளை சேர்ந்த 1000 பெண்கள் இதில் பங்கேற்று வரும் நிலையில், இந்திய பெண்களும் கணிசமான அளவில் பங்கேற்று வருகிறார்கள்.