மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேரருட் கலாநிதி பிடலின் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்கள், கடந்த 18.02.2018 சனிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரை வரவேற்கும்முகமாக, வவுனியா குறுமன்காடு தூய கிறிஸ்து அரசர் ஆலயத்தின் முன்பாக இருந்து,இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தை நோக்கி பங்கின் இளைஞர்களால், ஆயர் அழைத்து வரப்பட்டு சூசைப்பிள்ளையார்குளம் முன் நுளைவாயினில் இருந்து, இறம்பைக்குளம் மகளீர் தேசிய பாடசாலை மாணவிகளாள் Band வாத்தியத்துடனும், சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை மாணவிகளது இன்னிய வாத்தியம் இசைக்கப்பட்டு,
மறைக்கல்வி மாணவ மாணவிகள், மறை ஆசிரியர்கள், பங்கு மேட்புப்பணிச்சபை உறுப்பினர்கள், பங்குமக்கள்,சமயத்தலைவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அனைவரும் மங்களகரமாக இன்முகத்துடன் ஒன்றுகூடி, மகிழ்வுடன், ஆயர் அவர்களை, வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினுள் வரவேற்கக்கப்பட்டு, ஆயரினால் ஆலய முன்றலில் கொடியேற்றப்பட்டு சிறப்பு திருப்பலி கொடுக்கு நிகழ்வும் இடம்பெற்றது.