மரங்களுக்கு நடுவே தன்னந்தனியாக விமானம் : குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

572

 
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் மரங்களுக்கு நடுவே கைவிடப்பட்ட போயிங் விமானத்தை பார்க்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர், ஆனால் அவர்கள் யாருக்குமே அந்த விமானம் எப்படி வந்தது என தெரியவில்லை.

மரங்கள், கப்பல் கன்டெய்னர்கள் மற்றும் வீடு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கும் இந்த விமானம், ரெயா நஸா துவா செலடான் எனும் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த விமானத்தில் எந்த ஒரு அடையாளமும் குறிப்பிடப்படாமல் மர்மமாக காட்சியளிக்கிறது.

அதன் உரிமையாளர் ஒரு விமான உணவகத்தை உருவாக்க முயன்றதாகவும், ஆனால் அதிக செலவு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டு பாதியிலேயே நிறுத்திவிட்டார் எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிகின்றனர்.

பாதுகாப்புக்காக ஒரு பூட்டிய நுழைவாயிலுக்குப் பின்னால் விமானம் இருந்த போதிலும், சுற்றுலா பயணிகளின் பிடித்தமான இடமாக இப்போது மாறிவிட்டது.