வவுனியாவில் பொதுவெளியில் தமிழை கொண்டாடும் கருத்தாடல் நிகழ்வு!!

443

 
சமூக வலைத்தளங்களில் தமிழால் எழுதுவோரை செம்மையாக்கும் இலக்கண, இலக்கிய ஆய்வு கலந்துரையாடல் நேற்று (28.02.2018) மாலை 4 மணியளவில் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் வவுனியா காரியாலயத்தில் கவிஞர் முல்லைதீவு வே.தீபன் நெறியாள்கையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன் , யுரேனஸ் இளைஞர் கழக தலைவர் சிம்சுமன், வெளி சஞ்சிகை இதழாசிரியர் ந.அருளானந் , அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி , பசுமை புரட்சி அமைப்பின் ஸ்தாபகர் ந.விநோதன், வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் சி.கபிலன், நேர்மையின் புகழிடம் அமைப்பின் விநோதினி, பாரதி இளைஞர் கழக தலைவர் கமல், மற்றும் தமிழ் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வளவாளர் முல்லைதீவு வே.தீபனால் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு தொகை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.