நாம் செல்லுமிடமெல்லாம் நிலா எம்மைத் தொடர்ந்து வருவது ஏன்?

866

வாகனத்தில் பயணிக்கும் போதும் அல்லது நடக்கும் போதும் வானத்தில் தெரியும் நிலா நம் கூடவே வருவது போன்ற உணர்வு நம் அனைவருக்குமே தோன்றும்.

நிலா நம் கூடவே வருவது உண்மையா? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது நம்மில் யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நிலா நம்மோடு வருவது உண்மையா?

வானத்தில் தெரியும் நிலாவை நாம் எந்த ஊருக்கு சென்றாலும் பார்கலாம். எப்படியெனில் அதற்கு தூரமும் கோணமும் முக்கியப் பங்காற்றுகின்றது. அதாவது நிலா வெகு தொலைவில் இருக்கிறது. எனவே அது நகர்ந்தாலும் கூட அதன் கோணம் மாறாமல் அப்படியே தெரிவதால் நிலா அனைவரது கண்களுக்கும் தெரிகிறது.

அதேபோன்று வாகனத்தில் பயணம் செய்யும் போது நம் அருகில் இருக்கும் கட்டிடங்கள், மரங்கள், செடிகள் மற்றும் கம்பங்கள் போன்றவை நம்மை வேகமாகக் கடந்து செல்வது போன்று கூட தோன்றும். இவை அனைத்தும் நம் மூளை நம்முடன் வருவது போல் காட்சிப்படுத்திக் கொள்கிறது. ஆனால் வானத்தில் இருக்கும் நிலா உண்மையில் நம்மோடு வருவதில்லை என்பதே உண்மையாகும்.