உலகம் அழிந்தாலும் இந்தக் கட்டிடம் மட்டும் அழியாதாம் : எங்குள்ளது தெரியுமா?

807


 
அணு ஆயுதத்தின் மூலம் உலகமே அழிந்தாலும், அழியாத கட்டிடம் ஒன்று நோர்வே வடதுருவப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கட்டிடம் ஸ்வால்பார்டு (Svalbard) தீவில் உள்ளது.இங்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கு மேற்பட்ட பயிர் வகைகளின் கிடங்காக இருக்கும்.



2008ம் ஆண்டில் திறக்கப்பட்ட அந்தப் பயிர்க் கிடங்கு, இயற்கையின் மரபணுக்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இருக்கிறது.

ஏனெனில் இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம், போர், நோய்கள் ஆகிய அசம்பவிதங்கள் மூலம் பயிர் வகைகளுக்கு அழிவு நேரிடலாம்.



அவ்வாறு ஏற்பட்டால் அந்த பயிர்களை மீண்டும் வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கமாக உள்ளது.



மேலும் விலைமதிப்பில்லாத விதைகளைப் பாதுகாக்க 12.5 மில்லியன் டொலர் செலவு செய்யப்படும் என்று நோர்வே அண்மையில் அறிவித்திருந்தது.


அதனால் உலக வெப்பமயமாதலால் இந்த கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.