இந்திய அணி வீரர்களுக்கு பெண்களை அனுப்புவது இவர்தான் : பரபரப்பு குற்றச்சாட்டு!!

393

இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப் என்ற தரகர் தான் பெண்களை ஏற்பாடு செய்வதாக ஷமி மனைவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றம் சாட்டியிருந்தார்.

மட்டுமின்றி, ஷமி சில பெண்களுடன் ஆபாசமாக பேசியிருப்பது போல் சில ஸ்கிரீன்ஷொட்களையும்
தனது முகநூலில் அவரது மனைவி வெளியிட்டிருந்த நிலையில் தன் புகழை கெடுக்க பெரும் சதி நடப்பதாக ஷமி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குல்தீப் என்ற தரகர்தான் இந்திய அணிக்கு அதிகமாக பெண்களை ஏற்பாடு செய்கிறார்.

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி சென்ற போது கூட குல்தீப் உடனிருந்தார், அவரை என் கணவருடன் அடிக்கடி ஒன்றாக பார்த்திருக்கிறேன் என தற்போது கூறியுள்ளார்.

மேலும், மிகவும் கண்டிப்பான அமைப்பாக தன்னை காட்டிக் கொள்ளும் பிசிசிஐ-க்கு இந்த விடயம் அனைத்தும் தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பிசிசிஐ கண்டுகொள்வதுமில்லை, நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.