வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்!!

580

 
இலங்கை செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (08.03.2018) மதியம் 2.00 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது .

பெண்களின் முன்னேற்றத்துக்கான அழுத்தம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா,செட்டிகுளம் பிரதேச செயலாளர்
கே.சிவகரன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி இந்திரா ரூபசிங்க, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர் மற்றும் பொது அமைப்புகள் வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் வங்கியின் வவுனியா கிளையிலும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முகாமையாளர் கு.கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக சட்டத்தரணி கௌதமன் யாழினி, கூட்டுறவு உதவி ஆணையாளர் சுபசிங்கே, வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவு அதிபர் தியாகசோதி யுவராஜா , வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்ப பிரிவு அதிபர் மோ.ஞானமதி மற்றும் மக்கள் வங்கி வவுனியா கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.