ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : உண்மையை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம்!!

647

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் என்ற பேச்சுக்கே இடமில்ல்லை என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் திகதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் மூழ்கி இறந்தார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் கூறுகையில், எனக்கு தெரிந்தவரை ஐக்கிய அரபு அமீரகம் ஸ்ரீதேவி மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எங்களிடம் கொடுத்துவிட்டது.

அவர் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் அது தொடர்பான விடயம் இந்நேரம் வெளியில் வந்திருக்கும். அதனால் அவர் மரணத்தில் மர்மம் மற்றும் சந்தேகம் கிடையாது என கூறியுள்ளார்.