பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

484


தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பூனைக்குட்டி ஒன்றுக்கு நாய் பாலூட்டும் காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



மனிதநேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது. வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உயிரினத்தின் மீது அன்பு செலுத்தும் விலங்கின் செயல் அதைத் தான் உணர்த்துகிறது.

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான், இவர் பெண் நாய் ஒன்றையும், பூனைக்குட்டியையும் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.



இந்த நாய் சில வாரங்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், பூனைக்குட்டி அந்த பெண் நாயுடன் விளையாடி வந்ததுடன், நாயின் மடியில் தினசரி பால் குடித்து வருகிறது.



வேறு இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்கு நாய் பாலூட்டுவதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.