வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகேயுள்ள சுற்றுவட்ட வீதியில் இன்று (12.03.2018) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற லொறி – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா புதிய பேரூந்து நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி மோதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.