வவுனியாவில் இலவச மருத்துவ முகாம் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

1230

 
வவுனியா புனவேஸ்வரி அன்பு இல்லத்தின் மூன்றாம் ஆண்டு நினைவாக இன்று அவர்களது சாந்தசோலை பிரதான வீதியிலுள்ள நினைவிடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா பகவான் ஸ்ரீ சத்தியசாயி நிலையத்தின் பஜனை நிகழ்வுகளுடன் ஆரம்பமானது. லண்டன் மாநகரின் பிரபல சட்டத்தரணியான ஸ்ரீகாந்தாவினால் உத்தியோகபூர்வமாக நிகழ்வுகள் நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலவச மூக்குக்கண்ணாடிகள் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொண்டு வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் என்பன புவனேஸ்வரி அன்பு இல்லத்தின் குடும்ப உறுப்பினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.