வவுனியாவில் காற்று, மழை காரணமாக அலுவலகத்திற்கு மேல் வீழ்ந்த மரம்!!

480

 
வவுனியாவில் இன்று காலை முதல் பெய்து வந்த மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா கண்டி வீதியிலுள்ள பிரதம பொறியியலாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா அலுவலகத்திலுள்ள பாரிய மரம் ஒன்று பாறி அலுவலகத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது.

அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டபோதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது மரத்தினை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.