வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகள் தேவை!!

912

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற போதே உதவி திட்டப்பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையாகவுள்ளது என தெரிவித்ததுடன் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த வீட்டுத்திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட நிதிவிபரங்கள் தொடர்பிலும் தெரிவித்திருந்தார்.