சீகிரியா குகை தொடர்பான இரகசியங்கள் அம்பலம்!!

1355

சீகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்கள் தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீகிரிய கற்களை மையமாக கொண்டு அதனை சுற்றி ஓடும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்விலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் வடிவியல் இயல்பினை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்யைின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது, தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் அதன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மர கலப்புடனான களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.