புகையிரத விபத்துக்களினால் 36 நாட்களுக்குள் 35 பேர் பலி!!

300

இவ்வருடத்தின் ஆரம்ப 36 நாட்கள் காலப்பகுதிக்குள் புகையிரத விபத்துக்கள் காரணமாக 35 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசியப் பேரவையின் அறிக்கையில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் புகையிரதப் பயணங்களின் போது ஆபத்தான முறையில் செல்பி எடுத்துக் கொள்ள முனைந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ளன.

அதே ​போன்று புகையிரதப் பாதைக்குள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்தி புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 86 ஆக பதிவாகியுள்ளது.