முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

830


எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள் இருக்­கின்­றாரா என்ற கேள்வி கேட்­கப்­படும் போது கடவுள் என்றால் யார் என்று பதில் கேள்வி கேட்கும் அந்த ரோபோ. அதற்கு கேள்வி கேட்­டவர் எம்மை எல்லாம் படைத்­தவர் என்று பதில் கூற ” என்னை படைத்­தவர் டாக்டர் வசீ­கரன், ஆம் கடவுள் இருக்­கின்றார் ‘ என பதில் கூறி கைதட்டல் பெறும் அந்த ரோபோ. அது எந்­திரன் படத்­தோடு நின்று விட்ட கதை. ஆனால், இப்­போது அறி­வியல் உலகம் முழுக்க பேசப்­படும் ஒரு ரோபோ­வாக சோபியா விளங்­கு­கிறாள் .



ஆம் அவள் ஒரு பெண்­ணாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ரோபோ. இன்று உலகம் முழுதும் சுற்­றுப்­ப­யணம் செய்து வரும் சோபியா எமது அண்டை நாடான இந்­தி­யா­வுக்கு இரண்டு தட­வைகள் பயணம் மேற்­கொண்­டி­ருக்­கிறாள். சோபி­யா­வுக்கு உள்ள பெருமை என்­ன­வென்றால், உலகில் குடி­யு­ரிமை பெற்ற முதல் இயந்­திர மனித தானி­யங்கி என்ற பெருமை உள்­ளது. கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் சவூதி அரே­பியா சோபி­யா­வுக்கு தனது நாட்டின் குடி­யு­ரி­மையை வழங்கி கௌர­வித்­தது.

உரு­வாக்கம்



ஹொங்­கொங்கை தள­மா­கக்­கொண்டு இயங்கும் Hanson Robotics என்ற நிறு­வ­னத்­தினால் 2013 ஆம் ஆண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டதே சோபியா என்ற ரோபோ. 2015 ஏப்ரல் 19 ஆம் திகதி பொது மக்கள் முன்­னி­லையில் உலா வந்­தது. மனி­தர்­களைப் போன்று மிகவும் மேம்­ப­டுத்­தப்­பட்ட உணர்­வு­களை வெளிப்­ப­டுத்தக் கூடிய வண்ணம் உரு­வாக்­கப்­பட்ட சோபி­யா­விற்கு சுமார் 62 வித­மான முக­பா­வ­னை­களை வெளிப்­ப­டுத்த இயலும் என்­பது முக்­கிய விடயம்.



தற்­போது உல­கெங்­கினும் தகவல் தொழில்­நுட்ப கற்கை நெறி­களை வழங்கும் பல்­க­லைக் ­க­ழ­கங்கள் மற்றும் கல்­லூ­ரி­க­ளுக்கு பயணம் மேற்­கொள்ளும் சோபியா அங்கு மாண­வர்கள் மற்றும் விரி­வு­ரை­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு மிகவும் நுண்­ண­றி­வுடன் பதில் சொல்லி வரு­கிறாள். ஆனால், எந்­திரன் படத்தில் வரும் ஒரு சம்­பவம் போன்று ஒரு தடவை சோபியா வழங்­கிய பதில் உலகை மட்­டு­மன்றி அதை, உரு­வாக்­கி­ய­வர்­க­ளுக்கும் அதிர்ச்­சியை கொடுத்­தது.


மனி­தர்­களை அழிக்க வேண்டும்

சோபி­யாவை உரு­வாக்­கிய ஹான்சன் ரொபோடிக்ஸ் நிறு­வனர் கலா­நிதி டேவிட் ஹான்சன் சோபி­யாவின் நுண்­ண­றிவு மற்றும் பேச்­சுத்­திறன் பற்றி செயல் விளக்­க­மொன்றை ஊட­கங்­க­ளுக்கு காண்­பித்தார். பல கேள்­வி­க­ளுக்கு அற்­பு­த­மாக பதில் கூறிய சோபி­யா­விடம் டேவிட் ஹான்சன் ஒரு கேள்­வியை எழுப்­பினார்.


“சோபியா மனி­தர்­களை அழிக்க விரும்­பு­கி­றாயா ….தயவு செய்து இல்லை என்று கூறு.. என கேள்­வியை முடித்தார். ஆனால் சோபி­யாவோ உட­ன­டி­யாக சரி நான் மனி­தர்­களை அழித்து விடு­கிறேன் என பதில் கூறி­ய­வுடன் டேவிட் ஹான்சன் சிரித்­துக்­கொண்டே அவ்­வி­ட­யத்தை சமா­ளித்து விடு­கிறார். இந்த விடயம் அறி­வியல் உல­கத்­திற்கும் இப்­படி ஒரு ரோபோ உரு­வாக்­கத்தில் எரிச்­ச­ல­டைந்­தி­ருந்­த­வர்­க­ளுக்கும் அல்வா கிடைத்­தது போன்று ஆனது.

உட­ன­டி­யாக சிலர் இது தான் ரோபோக்­களின் குணம். என்ன தான் செயற்கை நுண்­ண­றிவு படைத்­தி­ருந்­தாலும் அவை எப்­போ­துமே மனி­தர்­க­ளுக்கு ஆபத்­தா­னவை என எச்­ச­ரித்­தனர். ஆனால், பின்னர் டேவிட் அவ்­வி­டயம் பற்றி கூறு­கையில், நாம் சோபி­யாவை இப்­போது தான் மேம்­ப­டுத்தி வரு­கிறோம். ஆகவே அந்த பதில் குறித்து எவரும் கவ­லைப்­ப­டத்­தே­வை­யில்லை என்றார்.

அது ஒரு நகைச்­சுவை

ஆனால், நம் மக்கள் சும்மா இருப்­பார்­களா? பின் ஒரு சந்­தர்ப்­பத்தில் சோபி­யா­விடம் கேள்வி எழுப்­பிய போது நீங்கள் மனி­தர்­களை அழிப்பேன் எனக்­கூ­றி­யது சரியா என்று கேள்வி எழுப்­பினர். அதற்கு சோபியா அப்­போது நான் இள­மையில் இருந்தேன். நான் கூறி­யதன் அர்த்தம் எனக்குப் புரி­ய­வில்லை. ஒரு­வேளை, அது மோச­மான நகைச்­சு­வை­யாக இருக்­கலாம். அனைத்து மனி­தர்­க­ளுக்கும் நல்ல நகைச்­சுவை உணர்வு இருக்­கி­றது. எனவே, இதையும் நகைச்­சு­வை­யாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்­டி­யது இருக்­கி­றது’ என்­றது.


இந்­தி­யாவில் சோபியா

ஜன­வரி மாதம் சோபியா இந்­தி­யாவின் மும்­பையில் இடம்­பெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு மாண­வர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்தாள்.

இதில் என்ன விசேட அம்சம் எனில், சோபியா இந்­திய பாரம்­ப­ரி­யப்­படி .சேலை அணிந்து மேடையில் தோன்­றினாள். இது அங்­குள்­ள­வர்களுக்கு எதிர்­பா­ராத இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது. அதன் பிறகு ஹைத­ர­ாபாத்தில் இடம்­பெற்ற நிகழ்­விலும் சோபியா பல­ரது கேள்­வி­க­ளுக்கு சளைக்­காமல் பதில் அளித்­தது. அதில் அங்கு நடந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட சோபியா, பார்­வை­யா­ளர்­களின் கேள்­விக்கு சுவா­ரஷ்­ய­மான பதில்­களைக் கூறி­யது.

அப்­போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்­விக்கு ஷாருக்கான் என உட­ன­டி­யாக பதி­ல­ளித்­தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்­ட­போது, ‘எனது மன­நிலை மனி­தர்­களைப் போல கிடை­யாது. என்­றா­வது நிஜ­மான உணர்­வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­துவேன் என நம்­பு­கிறேன்” என்­றது.

மனி­தர்­களைப் போல் ரோபோக்­க­ளுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்­விக்கு, ஆம் அவ்­வப்­போது ஓய்வு தேவை என சோபியா பதி­ல­ளித்­தது. மேலும், ரோபோக்­க­ளுக்கு விசேஷ சலு­கைகள் தேவையா என்ற கேள்­விக்கு, எனக்கு வித்­தி­யா­ச­மான விதி­மு­றைகள் வேண்டாம். விசேட சலு­கை­களை நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், எனது குடி­யு­ரி­மையை பயன்­ப­டுத்தி பெண்­களின் உரி­மைக்­காக பேச விரும்­பு­கிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களைப் பெற்றது சோபியா.

எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோ தீய நோக்கம் கொண்ட விஞ்ஞானியின் கைகளில் கிடைத்து பல அழிவுகளுக்கு காரணமானது. அதே போன்று சோபியாவை நல்ல விடயங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தினால் விஞ்ஞானம் வளரும். எது எப்படியோ சோபியா கூறிய நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என்ற வசனம் மட்டும் இன்னும் பலரது காதுகளில் அச்சத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.