பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர் : திடுக்கிடும் காரணம்!!

400

நேபாளத்தில் பெற்ற மகளை கெளரவ கொலை செய்ததாக, கொல்லப்பட்ட மகளின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தனுஷா மாவட்டத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (40), இவர் மனைவி சரிதா தேவி, தம்பதிக்கு ஸ்னேகா குமாரி யாதவ் (19) என்ற மகள் இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஸ்னேகாவுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் ஸ்னேகா வேறு ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில், அந்த நபருடன் அவர் இருப்பதை மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து காதல் விவகாரம் குறித்து ஸ்னேகாவுக்கும், அவர் தந்தை திலீப்குமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி ஸ்னேகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு உடல்நலக்கோளாறால் ஸ்னேகா உயிரிழந்ததாக அவர் பெற்றோர் கூறியுள்ளனர்.

அடுத்தநாள் ஸ்னேகாவின் சடலத்தை அவர் பெற்றோர் காரில் எடுத்து கொண்டு எங்கேயோ சென்று அதை எரித்துள்ளனர்.

இது அக்கம்பக்கத்தினருக்கு பலத்த சந்தேகத்தை கிளப்பிய நிலையில் பொலிசாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் திலீப்குமாரும், சரிதாவும் வீட்டுக்கு வராத நிலையில் அவர்களிடம் விசாரிக்க பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் உறவினர் வீட்டில் இருந்த திலீப்பை பொலிசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மகளின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு சென்று அவர் எரித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.

சரிதா இன்னும் கைது செய்யப்படவில்லை. ஸ்னேகா பெற்றோருடன் வசித்த வந்த வீட்டின் சுவர்களில் ரத்த கறைகள் இருப்பதையும் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.