பெற்ற மகன் மற்றும் மகளை திருமணம் செய்து கொண்ட தாய்!!

869

அமெரிக்காவில் மகன் மற்றும் மகளை திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Oklahoma மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரிசியா ஸ்பேன் (45). இவருக்கு மிஸ்டி (26) என்ற மகளும், ஜொடி ஜூனியர் மற்றும் கொய்டி என இரண்டு மகன்களும் உள்ளனர்.

மிஸ்டி சிறுவயதிலிருந்தே தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த நிலையில் 2014-ல் தாய் பேட்ரிசியாவுடன் சேர்ந்துள்ளார்.

பின்னர் தாய் மற்றும் மகள் இடையே தவறான உறவு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். Oklahoma மாகாண சட்டப்படி இது தவறு என்பதால் பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் பேட்ரிசியா ஏற்கனவே கடந்த 2008ல் தனது மகன் ஜொடி ஜூனியரை திருமணம் செய்தது தெரியவந்தது. பின்னர் இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க ஜொடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தெரிந்தது.

இதோடு இன்னொரு மகன் கொய்டியையும் திருமணம் செய்ய பேட்ரிசியா முயற்சித்துள்ளார். இதையடுத்து பொலிசார் பேட்ரிசியா மற்றும் மிஸ்டியை கடந்தாண்டு கைது செய்தனர்.

அவர்கள் மீதான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பேட்ரிசியாவுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு எட்டாண்டுகள் நன்னடத்தையை சோதிக்கவும், $1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும், மாகாண பாதிக்கப்பட்டோரின் இழப்பீட்டு நிதியில் $300 வழங்கவும் பேட்ரிசியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னொரு குற்றவாளியான மிஸ்டிக்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில், பத்தாண்டுகள் அவர் நன்னடத்தையை சோதிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.