சமூக வலைத்தள கட்டுப்பாடு : புதிய கோரிக்கை!!

278

சமூக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை தடுக்கும் நோக்கில், புதிய சட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டம் உருவாக்கப்படும் போது, கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இது தொடர்பில் இலங்கை தொடர்பு ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு இணங்க, தேசிய பாதுகாப்பின் பொருட்டு சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இவ்வாறு செய்யும் போது, அரசியல் யாப்பின் கீழ் உள்ள மனித உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.