வடமாகாணத்திற்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் ‘தொழில் வழிகாட்டல்’ செயலமர்வுகள்!!

299

 
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உளநலப்பிரிவினரால், வடமாகாணத்திற்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் ‘தொழில் வழிகாட்டல்’ செயலமர்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்ற மேற்படிஅமர்வுகளை, துறைசார் பிரிவின் வடமாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி உதயகலா நெறிப்படுத்தி வருகிறார்.

உளவளத்தை முறையாகப் பயின்ற ஆசிரியர்களே, மாணவர்களுக்கு ஏற்றவகையில் தெளிவாக விளக்குகிறார்கள் என்பதை நேரடியாகவே காணக்கிடைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வளப்பற்றாக்குறையான வலயங்களினது மாணவர்களுக்கு இவ்வழிகாட்டல்கள் மிகவும் பயனுறுதி மிக்கனவாக அமைகின்றன.

O/L , A/L பரீட்சைகளை எழுதியதன் பின்னர் திசையறியாது செய்வதறியாது யோசித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் அவசியமாகத் தேவைப்படுகின்றன.

தூரப்பிரதேச மாணவர்கள் பேருந்துகளில் வருகைதந்தமையும், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் மாணவர்களை அழைத்துவந்திருந்ததனையும் அவதானிக்கக்கூடியதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.