வவுனியாவில் புளொட் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு!!

352

 
வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றையதினம் (16.03.2018 )
புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும்
வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மற்றும் வவுனியா நகர,பிரதேச சபைகளிற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (TNA) போட்டியிட்ட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இச் சந்திப்பில் எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், கடந்த கால நகரசபை நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்வது என்று உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.